கீச்சுகள் தொகுப்பு 62



உறக்கம் திருடும் குளிர் தோய்ந்த நடுநிசிக்கு என்ன பெரிதாய் தேவையிருக்கப் போகிறது ஏதோ ஒரு நிறைவின் கொண்டாட்டமோ குறைவின் பசியோ தவிர்த்து

-

தை மாத விடியலில் வந்திருக்கும் மழைத்தூறல் நம்பும்படியாக இல்லை என்பதைவிட நல்லதுக்கு அல்ல என்று மட்டும் புரிகிறது!

-

நான் சொல்றத புரிஞ்சுக்க, சரியா?”என நாம் சொல்லும்போதே புரிந்துகொள்ளவே இயலாத அண்டவெளிக்கு அவர்கள் சென்றுவிட்டனர் என்பதையும் புரிந்துகொள்வோம்

-

காணும் ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் ‘அது அந்தக் குழந்தையின் முகம்’ என ஒப்புக்கொள்ளாமல் யாரோ ஒருவரைத் தேடி, யாரோ போல் இருப்பதாய் சொல்கிறோம்!

-

இப்பவே கேலண்டரை எடுத்துப் பார்த்துட்டு அடச்சே தீவாளி சனிக்கிழமை வருதுனு ஸ்கூலுக்கு போற புள்ளைய என்ன சொல்றது!

-

கொம்பில்லா கலப்பின மாடுகளுக்கு பூ, பொட்டு வச்சு பொங்கல் கொண்டாடுறது, எமி ஜாக்சனுக்கு பாவாடை தாவணி போட்டு தமிழ்ப்பொண்ணா வேசம் கட்டுன மாதிரி

-

மாடுகள் ஏதுமில்லை எஞ்சியிருக்கும் அதன் வாசனையோடு வந்து குவியும் கிராஃபிக்ஸ் மாடுகளின் வாழ்த்துகளோடுதான்... இந்த நாளைக் கடக்க வேண்டும்!

-

வேட்டி தினம் என்பது அன்றைக்கு மட்டும் வேட்டி கட்டி போட்டோ போடுவதற்காக அல்ல... அவ்வப்போது வேட்டி கட்ட வேண்டும் என நினைவூட்டுவதற்காக!

-

வேண்டாம், முடியாது என்பதை வேண்டாம், முடியாது என நயமாகச் சொல்வதுதான் இருவருக்கும் நல்லது!

-

பிரியத்தின் முத்தம் கதகதப்பாகவும், கோபத்தின் முத்தம் குளிர் சூடியதாயும்!

-

50 பைசா காசும் அருங்காட்சியகத்துக்குப் போயிடுச்சா? மார்வாடி டீக் கடைக்காரன் 1 ரூ கேட்டப்போ 2 அம்பது பைசா கொடுத்ததுக்கு அல்பமா பாக்குறான்!

-

புது வருசத்துக்கு எதும் கெட்ட பழக்கத்தை விடணும் நினைச்சா வருசா வருசம் சபதம் எடுக்கிற கெட்ட பழக்கத்தை விடுங்க! :)

-

இருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை! ”So..!?” அதனுடைய நீள, அகலத்துக்கும் மகிழ்ச்சியா இருந்துடணும்

-

பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான்

-

ஒரு குழந்தையின் வார்ப்பு அந்தக் குழந்தைக்காக மட்டுமே செய்யப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றது. இன்னொரு குழந்தை என்பது இன்னொன்றுதான்.

-

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த உலகத்தை சன்னல் வழியே மட்டும் பார்ப்பீர்கள்!

-

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் வயதாகவில்லை என மனம் நினைப்பது பிரியமன்றி வேறென்ன!?

-

பொங்கல், கிருஸ்துமஸ், தீபாவளியை முன்கூட்டியே கொண்டாடும் (கல்வி) நிறுவனங்கள் ஏன் விவசாயிகள் தினத்தை அப்படியாகக் கொண்டாடுவதில்லை

-

இருக்கும் பதில்களுக்கு கேள்விகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

-

கிளைகளில் வைத்தியம் செய்கின்றோம்... சிக்கல் வேர்களில் இருக்கின்றது!

-

டிசம்பர்ல குளிக்கிறவன் வீரன்! அதுவும் பச்சத் தண்ணில குளிக்கிறவன் மாவீரன்!

-

பல்வேறு கதாபாத்திரங்களை வாழ்க்கை வழங்கினாலும், அதில் பிடித்ததாக நினைத்துக்கொள்வதை மட்டுமே சலித்துப்போகுமளவிற்கு திரும்பத்திரும்ப ஏற்கிறோம்.

-



கிடைத்தால் இறக்கைகளை பிய்த்து, கால்களை முறித்து வீசும் அளவிற்கான வன்மத்தை கொசுக்கள் ஏற்படுத்தியிருக்கின்றன!

-

கேரிபேக் வேணாமென மறுக்கையில் கருவம் ஓங்கி வளருதடி!

-

வெளியேறும் வழி தெரியாத எல்லா உள் நுழைவும் சூதாட்டமே!

-
இந்த வரலாறு காணாதங்கிற வார்த்தையை நிறுத்தச்சொல்லனும். வரலாறு அப்படியே எதையாச்சும் கண்டிருந்தாலும், இப்ப பிரச்சனை இப்போதைக்கு பெருசுதான்

-

'வாழ்ந்திட' தினம்தோறும் கற்றுக் கொள்வதும், மறப்பதும் அவசியமென்பதே ஆகச்சிறந்த சுவாரஸ்யம்தான்!

-

No comments: