அதுவே போர் அதுவே விடுதலை





நான் சேகரித்து வைத்திருக்கும்
பிரியமிகு சொற்களில்
முல்லையின் வாசம்
நுரைத்துப் பொங்கிக் கொண்டிருந்தது

முத்தமும் மோகமும்
என்னவெனக் கிறங்கி கேட்ட
கணத்தில்தான் சொன்னேன்
அதுவே போர் அதுவே விடுதலை

கனகச்சிதமாய் உதிர்த்த
வரியொன்றின் உள்ளும் புறமும்
உன் பெயர் வரியோடிய
சொற்களை நிரப்பி வைத்திருந்தாய்

சடசடக்கும் அடைமழையில்
வெடவெடக்கும் குளிரில்
வேறெதும் கேட்கத் தோன்றவில்லை
காதோரம் கதகதக்கும்
கொஞ்சம் சொற்களைத் தவிர!

-

1 comment:

chandana easwaramurthy said...

அழகான கவிதை,
கொஞ்சும் நு வந்திருக்கலாம்.